அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

0
அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது‌. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

செல்போன்

தமிழகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர் பொதுநல வழக்கு ஒன்றை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். இந்த மனுவில், திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது போன்ற புகைப்படம் மற்றும் அங்குள்ள சிலைகள் முன்பாக செல்பி எடுப்பது உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார்.

Exams Daily Mobile App Download

அதனால் திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன்களுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு – ‘RCD’ கருவி கட்டாயம்.. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த நடவடிக்கையானது கோயிலின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகள் குறித்த கட்டுப்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை விதிக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!