தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு – ‘RCD’ கருவி கட்டாயம்.. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!

0
தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு - 'RCD' கருவி கட்டாயம்.. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!
தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு - 'RCD' கருவி கட்டாயம்.. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!
தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு – ‘RCD’ கருவி கட்டாயம்.. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் மின் கசிவால் அவ்வப்போது எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க ஆர்சிடி கருவியை பொருத்த வேண்டும் என்று மின் நுகர்வோர்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்சிடி கருவி:

தமிழகத்தில் ஏற்படும் மின் கசிவு அதனால் நிகழும் இறப்புகளை தடுக்க தமிழக மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் கம்பங்கள் சரி செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து மின் வாரியம் சார்பில் பாதுகாப்பான கடின மின் வயர்கள் பொருத்தப்பட்டும் வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின் பயனர்கள் ஆர்சிடி கருவியை பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வீடு, கடை, தொழில் நிறுவனங்கள், பண்ணைகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் கட்டாயம் ஆர்சிடி கருவியை பொருத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பொங்கல் பரிசு அப்டேட்.. வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல்!

Follow our Instagram for more Latest Updates

தற்போது தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் அதிக காற்று, மழை பொழிவின் காரணமாக மின் கம்பங்கள் சாய்வது, மரங்கள் சாய்வது உள்ளிட்டவைகள் நிகழ வாய்ப்புள்ளது. இதனால் மின் கம்பிகள் அவிழ்ந்து மின் கசிவு ஏற்பட அபாயம் உள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!