PF கணக்கு தொடங்க திட்டமிட்டோர் கவனத்திற்கு – சேமிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
PF கணக்கு தொடங்க திட்டமிட்டோர் கவனத்திற்கு - சேமிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
PF கணக்கு தொடங்க திட்டமிட்டோர் கவனத்திற்கு - சேமிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
PF கணக்கு தொடங்க திட்டமிட்டோர் கவனத்திற்கு – சேமிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

இந்தியாவை பொறுத்த வரையில் முதலீட்டாளர்களை கவரும் வண்ணம் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், ஏனெனில் பாதுகாப்பான, கணிசமான வருவாய் கொடுக்கும் ஒரு திட்டமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. எனவே இந்த திட்டத்தில் சேமிப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம் இதோ:

அரசு மற்றும் அரசு சாரா நிறுவன ஊழியர்களுக்கு எதிர்கால நிதி பாதுகாப்பு வழங்கவும், ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பை வழங்கவும் செயல்பாட்டில் உள்ள திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டம் 1968 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். முதலீட்டுக்கு பங்கமில்லாத ஒரு திட்டமாக விளங்குகிறது. இந்த திட்ட கணக்கைத் தொடங்க ரூபாய் 100 இருந்தால் போதும். இதில் இளமை பருவத்தில், சேர்ந்து விட்டால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மிகப் பெரிய தொகையைப் பெறலாம்.

தபால் நிலையம் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்களிலும் பிபிஎப் கணக்கு தொடங்கும் வசதி உள்ளது. இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போது இந்த விகிதம் 7.1% ஆக உள்ளது. இது பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு சரியான திட்டம் தான். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும்.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தின் கால வரம்பு 15 வருடம் என்றாலும், இந்த திட்டத்தின் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுதிகளாக தொடரலாம் என்பதால், இது இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது. அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்க முடியாது. திட்டம் கண்டிப்பாக 15 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். பிபிஎப் கணக்கில் உள்ள மொத்த தொகையும் எடுக்க வேண்டும் என்றால் 15 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே எடுக்க முடியும். அதிகபட்சம் நமது சேமிப்பில் இருந்து 25 சதவீதத்தை கடனாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!