ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – பிளாஸ்டிக் அட்டையை ஆர்டர் செய்வது எப்படி!
இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் கார்டு கருதப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற புதிய நடைமுறையை UIDAI அறிமுகம் செய்துள்ளது.
பிளாஸ்டிக் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி:
ஆதார் என்பது ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை குறிப்பிட்டு காட்டும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக UIDAI அமைப்பு, தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண் ஆகும். இந்த நிலையில் ஆதார் கார்டு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும் ஆதார் கார்டை எடுத்துச் செல்வதில் சிக்கல் இருந்தது. இதை தவிர்க்கும் பொருட்டு பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இருப்பினும் கார்டுதாரர்கள் தங்கள் பிளாஸ்டிக் ஆதார் நகலை தனியார் மையங்களில் வாங்குவதை தடுக்கும் விதமாக, UIDAI அமைப்பு சமீபத்தில் கட்டணம் 50 ரூபாய் வசூலித்து பிளாஸ்டிக் ஆதார் கார்டை விநியோகிக்கிறது. இந்த ஆதார் கார்டு மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடையும், பல்வேறு துறைகளில் நடைபெறும் மோசடிகளும் தடுக்கப்படுகின்றன. இந்த வகையில் ஆதார் அட்டை பெற யார் விண்ணப்பித்தாலும், அட்டையில் உள்ள முகவரிக்கு தான் பிளாஸ்டிக் ஆதார் அட்டை செல்லும் எனவே, முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று UIDAI நிறுவன அதிகாரி கூறினார்.
1. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே ஆதார் அட்டைக்கு ஆர்டர் செய்ய முடியும். இதனை எளிமைப்படுத்தும் விதமாக ஆதாரில் பதிவு செய்யப்படாத எண்ணைக் கொண்டு ஆர்டர் செய்யும் சேவையை UIDAI தற்போது அறிமுகம் செய்துள்ளது.
2. இந்த சேவையை https://myaadhaar.uidai.gov.
3. இதன் மூலம் குடும்பத்தினர் அனைவருக்கும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்.