தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் – பொருட்கள் விநியோகம் தடை!
தமிழகம் முழுவதும் நேற்று ரேஷன் கடைகளில் உள்ள கருவிகள் சர்வர் பிரச்சனையால் முடங்கிய நிலையில், ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
சர்வர் பிரச்சனை:
தமிழகத்தில் மொத்தம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பொதுமக்களுக்கு அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் ரேஷன் அட்டைகளின் மூலமாக தான் வழங்குகிறது. மேலும் மாதந்தோறும் மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் மற்றும் அரசி, கோதுமை போன்றவற்றை இலவசமாகவும் வழங்குகிறது.
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? முழு விவரம் இதோ!
அரசு வழங்கும் இந்த பொருட்களின் மூலமாக ஏராளமான ஏழை, எளிய குடும்பத்தினர் மிகவும் பயனடைந்து வருகின்றனர். தற்போது கடந்த சில வருடங்களாக அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து பணிகளும் நடக்கிறது. பொருட்களை வாங்கும் போது ’பாயிண்ட் ஆப் சேல்’ என்கிற விற்பனை முனைய கருவிகளின் மூலமாக மக்களின் கைரேகை பதிவு செய்யப்படும். கடைகளில் உள்ள மொத்த இருப்பு போன்றவையும் அந்த கார்டில் தான் பதிவு செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
நேற்று காலையில் பொதுமக்கள் வழக்கம் போல், பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் வந்து வரிசையில் நின்றனர். காலை 10 மணியளவில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சர்வர் பிரச்சனையால் கைரேகை பதிவு செய்ய முடியாமல் இருந்தது. இதனால் பொருட்கள் விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனால் பலரும் பொருட்களை வாங்க முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர், பிற்பகலில் சர்வர் பிரச்சனை சரி செய்யப்பட்டு மீண்டும் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.