மின்துறையின் தனியார்மயமாக்கல் விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
மின்துறையின் தனியார்மயமாக்கல் விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மின்துறையின் தனியார்மயமாக்கல் விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மின்துறையின் தனியார்மயமாக்கல் விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுச்சேரியில் மின்சார துறையை தனியார்மயமாக்குவதை அரசு அறிவித்து, அதற்கான மேற்படி நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு:

நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் உள்ள பொதுத்துறையை சேர்ந்த நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான முடிவை மத்திய நிதியமைச்சர் கடந்த வருடம் அறிவித்தார். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது மூலம் நாட்டின் வராக் கடன் நிலுவை ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக வங்கிகள் தனியார் மயமாக்குவதற்கான அறிவிப்புகள் வெளியானது.

தமிழக பள்ளி,கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு.. நவ.19 வேலை நாள்.. அரசு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், மத்திய அரசின் கீழ் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்தின் மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, இதற்கான டெண்டர்கள் கோரப்பட்டன. மின்துறை தனியார் மயமாக்கலை மின்துறை ஊழியர்கள் எதிர்த்து வந்தனர். மேலும், புதுவை மின்துறை சான்றிதழ் பெற்றோர் நலசங்கம் மற்றும் மின்துறை ஊழியர்கள் டெண்டரை இறுதி செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கோரப்பட்ட டெண்டரை இறுதி செய்யக் கூடாது என்று புதுவை அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!