ரயில் பயணிகளின் தகவல் தனியாருக்கு விற்பனை? IRCTC அதிரடி முடிவு!
இந்திய ரயில் பயணிகளின் தகவல்கள் அனைத்தும் தனியார் நிறுவனத்திற்கு IRCTC விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ரயில் பயணிகள் அனைவருமே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
IRCTC அதிரடி அறிவிப்பு
இந்திய ரயில் பயணிகள் அனைவரும் இந்திய ரயில் நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசியின் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தான் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பயணிகள் முன்பதிவு செய்யும் போது பயணியின் பெயர், முகவரி, வயது, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்கின்றனர். இந்நிலையில், ஐஆர்சிடிசி வணிக நோக்கத்திற்காக பயணிகளின் அனைத்து விவரங்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை கேட்டு ரயில் பயணிகள் அனைவருமே கொந்தளித்துள்ளனர். அதாவது, பயணிகளின் விவரங்களை வழங்குவதற்கு ஐஆர்சிடிசி தனியார் நிறுவனத்திடம் டெண்டர் கோரியுள்ளது. இவ்வாறு விற்கப்படும் பயணிகளின் தகவல்கள் சுற்றுலா, தங்குமிடம், நிதி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, காப்பீட்டுத்துறை, சுகாதாரம், உற்பத்தி, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து, ஆற்றல் உருவாக்கம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரே நாடு & ஒரே தேர்தல் – விரைவில் அறிவிக்க முடிவு!
Exams Daily Mobile App Download
மேலும், பயணிகளின் விவரங்களை தனியாரிடம் கொடுப்பதன் மூலமாக ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் வருவாய்க்காக பயணிகளின் விவரங்களை அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதா என பயணிகள் அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், இது வரைக்கும் எந்தவித அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்