பெங்களூருவில் நாளை (மே 8) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 60+ நிறுவனங்கள் பங்கேற்பு!
பெங்களுருவில் தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் மேஜிக் பஸ் பவுண்டேஷன் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு முகமை சார்பாக மே 8ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
இந்தியாவில் தற்போது அதிகரிக்கும் விலைவாசிக்கு மத்தியில் மாத வருமானம் போதாத நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். வேலையினால் கிடைக்க கூடிய மாத ஊதியம் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளையும் பொருட்களை கூட வாங்கி முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க தொடங்கியதும் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி அலைய தொடங்கினர். இவர்களுக்கு உதவும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியது.
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நாளை (மே 8) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் மேஜிக் பஸ் பவுண்டேஷன் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு முகமை ஆகியவற்றின் சார்பாக பாபுஜி நகர், மாநகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள தொழிலாளர் சமுதாயக் கூடத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளை சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளனர்.
Exams Daily Mobile App Download
எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களின் சுய விவர குறிப்பு, தங்களின் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், பான் முதலியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.