தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் அலை பரவி வரும் காரணத்தால் மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற வருத்தத்தில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அவர்களின் தவிப்பை போக்கும் வண்ணம் தமிழக அரசு கொரோனா அலை குறித்து முக்கிய விளக்கம் அளித்து உள்ளது.
மீண்டும் கொரோனா:
தமிழகத்தில் சென்ற இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாகி இருந்த காரணத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்புகளும் பாழாய் போனது என்றே கூறலாம். ஏன் என்றால் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்து இருந்த காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில் சென்ற மே 5ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் துவங்கப் பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? PFRDA தடை!
இந்த நிலையில் இவ்வாறு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நேரத்தில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவலின் அலை துவங்கி உள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த கேள்விகளுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதை இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.
Exams Daily Mobile App Download
அவர் கூறியதாவது, 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் பரவலாக உள்ளது. 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு கவலைப்பட வேண்டிய கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதனை தொடர்ந்து, தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது. மேலும் மாநிலத்தில் 1,000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டும் தான் தற்போது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகளை தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சனை இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.