மதுரையில் நாளை (ஜன.7) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை!

0
மதுரையில் நாளை (ஜன.7) தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை!
மதுரையில் நாளை (ஜன.7) தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை!
மதுரையில் நாளை (ஜன.7) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாமை அரசு ஏற்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து நாளை மதுரையில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாமை அரசு ஏற்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து நாளை மதுரையில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முகாம் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 50% சம்பள உயர்வு – புத்தாண்டில் ஜாக்பாட் அறிவிப்பு!

இந்த மாபெரும் முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் மதுரையில் உள்ள கோ புதூரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து தேவையான சான்றிதழ்களை சமர்ப்பித்த பிறகு பங்கு பெறலாம். அத்துடன் இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும் ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கலாம். இம்முகாமில் வெளிநாட்டினர்கள் கூட தங்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ளலாம். வெளிநாட்டினர்களுக்கும் மேலே குறிப்பிட்ட கல்வித்தகுதி பெற்றிந்தால் போதுமானது.

தமிழகத்தில் ஜன.16க்கு பிறகு முழு ஊரடங்கு அமல்? அரசு திட்டம்! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

இதையடுத்து இம்முகாமில் கலந்து கொண்டு வேலையளிக்க நினைக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டினர்கள் இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவேற்றம் செய்து பங்கு பெறலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டினர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை பெற்று கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் ந.மகாலெட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!