தமிழகத்தில் ஜன.16க்கு பிறகு முழு ஊரடங்கு அமல்? அரசு திட்டம்! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. இதன் பேரில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்தது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1000த்திற்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில் மக்கள் சற்று ஆறுதலடைந்து மீண்டும் பணிகளுக்கு சென்று விடுவோம். புத்தாண்டு பிறந்ததை அடுத்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தற்போது பேரிடராக ஓமிக்ரான் தொற்று தீவிரமெடுத்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் 100 க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இத்தகைய நிலை தொடர்ந்தால் இரண்டாம் அலை போல மிக மோசமான நிலையை தமிழகம் எதிர்கொள்ளும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சுகாதாரத் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று (06.01.2022) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 10 மணி வரை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜனவரி 21ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் பொது விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் வாரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாகவும் விழா முடிந்ததும் அதாவது ஜனவரி 16 க்கு பிறகு மீண்டும் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது