மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 50% சம்பள உயர்வு – புத்தாண்டில் ஜாக்பாட் அறிவிப்பு!
ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஜூனியர் ஆசிரியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் உயர்த்தி முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்பினால் மொத்தம் 33,038 ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் அதிகரிப்பு:
7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அனைத்து அரசு உதவிபெறாத பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களின் ஊழியர்களுக்கான மானியத்தை அரசு அதிகரித்துள்ளது. டிசம்பர் 31 அன்று 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மதரசாக்களில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒடிசா அரசு ஒப்புதல் அளித்தது. தகுதியான பயனாளிகளுக்கு ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்பட்ட சம்பளம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தம்? நிதி அமைச்சகம் விளக்கம்!
2022 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரெகுலர் மற்றும் கான்ட்ராக்ட் ஜூனியர் ஆசிரியர்களின் சம்பளம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஜூனியர் ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால் 13,324 ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் 19,714 ரெகுலர் ஜூனியர் ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 33,038 ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC துறைத் தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு – உடனே பாருங்க..!
அரசின் சம்பள உயர்வை அடுத்து தற்போது மாதம் ரூ.7,400 பெற்று வரும் ஒப்பந்த ஜூனியர் ஆசிரியர்களுக்கு, இனி ரூ.11,000 மாத ஊதியம் வழங்கப்படும். அதேபோல, ரெகுலர் ஜூனியர் ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள ரூ.9,200க்கு பதிலாக ரூ.13,800 மாத ஊதியம் வழங்கப்படும். இந்த உயர்வால் மாநில கருவூலத்துக்கு ஆண்டுக்கு ரூ.168 கோடி கூடுதல் செலவாகும். மாநில அரசின் இந்த முடிவை ஜூனியர் ஆசிரியர் சங்கம் வரவேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது. ஒடிசா ஜூனியர் டீச்சர் அசோசியேஷன் தலைவர் அக்ஷய் குமார் பதி, அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைவதாகவும், முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற மாநில அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.