தனியார் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள 40 தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுயநிதி பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்டண உயர்வு:
தமிழகத்தில் 500-க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த கல்லூரிகளுக்கான கட்டணத்தை தமிழக பொறியியல் கல்லூரி கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்து. குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு அனுப்புகிறது. இந்த கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்வாகநிதி பிரிவில் சேரும் மாணவர்களுக்கான கல்லூரி கட்டணத்தை தமிழகத்தில் உள்ள 40 கல்லூரிகளுக்கு அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை குழு ஆலோசனை!!
அதில் பொதுவாக சுயநிதி பிரிவில் கல்லூரி கட்டணம் 85000 இருந்தது தற்போது 140000-மாக உயர்த்தப்பட்டுள்ளது இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 40 கல்லூரிகளில் கட்டண உயர்வை அறிவித்த நிலையில் மீண்டும் இன்னும் சில கல்லூரிகளில் கட்டண உயர்வு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்