தமிழகத்தில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை குழு ஆலோசனை!!

6
தமிழகத்தில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை குழு
தமிழகத்தில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை குழு
தமிழகத்தில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை குழு ஆலோசனை!!

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இந்நிலையில் பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கலாம் என கல்வித்துறை குழு ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 6மாத காலம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு முதல்கட்டமாக தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள் திறக்கப்பட்டன. அதன் பின் அடுத்தகட்டமாக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின.

CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? – கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!!!

அதன்பின் பள்ளிகள் திறப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது ஆனால் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தோற்று அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது எப்போது பள்ளிகள் திறக்கலாம் என கல்வித்துறை குழு சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி இந்த மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் இருப்பதால் ஜனவரி 4 முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழக பள்ளிகல்வி முதன்மைசெயலர் தீரஜ்குமார் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிச்சாமி, கருப்பசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்படி, 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4லும், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், ஜனவரி 20ம்தேதியும், பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவக்கலாம் என கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தி அனுமதி பெற்று அதன்பின், தலைமை செயலர், பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் முதல்வரின் ஒப்புதலை பெற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடலாம் என முடிவாகியுள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. பள்ளிகளை தற்போது திறக்கவேண்டாம் தேர்தல் முடிந்தவுடன் திறக்கவும் பள்ளிகளை பணம் வேண்டும் என்றால் வசூல்செய்து கொள்ள உத்தரவு போட்டு விடுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!