தீவிரமடையும் ரஷ்யா, உக்ரைன் போர் – இந்தியர்களை தரைவழியாக மீட்க நடவடிக்கை! பிரதமர் ஆலோசனை!

0
தீவிரமடையும் ரஷ்யா, உக்ரைன் போர் - இந்தியர்களை தரைவழியாக மீட்க நடவடிக்கை! பிரதமர் ஆலோசனை!
தீவிரமடையும் ரஷ்யா, உக்ரைன் போர் - இந்தியர்களை தரைவழியாக மீட்க நடவடிக்கை! பிரதமர் ஆலோசனை!
தீவிரமடையும் ரஷ்யா, உக்ரைன் போர் – இந்தியர்களை தரைவழியாக மீட்க நடவடிக்கை! பிரதமர் ஆலோசனை!

இந்தியர்களை பாதுகாப்பாக உக்ரைன் நாட்டில் இருந்து தரைவழியாக மீட்பது குறித்தான ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மதியம் 12 மணியளவில் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆலோசனை கூட்டம்:

நேட்டோ அமைப்பில் உக்ரைன் நுழைய முயற்சித்தது தொடர்பாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் இன்றுடன் இரண்டாவது நாளாக வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் என அனைத்தின் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகரான கிவ் உள்பட பல நகரங்கள் முழுவதுமே நுழைக்குலைந்துள்ளது. அங்கு வசித்து வரும் மக்கள் அனைவருமே பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – வட்டியில்லா அட்வான்ஸ் தொகை!

வெளிநாட்டு பயணிகளுமே உக்ரைன் நாட்டில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். உக்ரைன் நாட்டில் இருக்கும் அனைத்து விமான படைகளையும் ரஷ்யா அழித்து விட்டது. இதனால் விமானங்கள் முலமாக வெளிநாட்டுக்கு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினை தொடர்பு கொண்டு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ரஷ்ய அதிபரும் அந்த வேண்டுகோளை ஏற்று இந்தியர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா வழியாக மீட்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். வான்வெளி போக்குவரத்து எதுவும் இல்லாத காரணத்தினால் சாலை வழியாக இந்தியர்கள் ருமேனியா செல்ல வேண்டும். ருமேனியாவில் இருந்து விமானம் மூலமாக இந்தியர்கள் இந்தியா வரவழைக்க திட்டம் போட்டு கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மதியம் 12 மணியளவில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!