சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

0
சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு - பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் மோடி சமையல் எரிவாயுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தின் கால அளவு இன்னும் ஓர் ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்தார்.

எரிவாயு மானிய திட்டம்:

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு சமையல் எரிவாயு மானியமாக ரூ.300/- வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த திட்டம் நீட்டிக்கப்படுமா என்னும் அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி தலைமையில் தற்போது நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு திட்ட மானியத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு துறையில் ரூ.11,000/- மாத சம்பளத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!  

இத்திட்டத்தை தடையின்றி செயல்படுத்த சமையல் எரிவாயு மானிய திட்டத்திற்கென ரூ.12,000 கோடி மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். மேலும் இந்த அமைச்சரவையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!