ஆகஸ்ட் 1 முதல் ஜனாதிபதி மாளிகை, அருங்காட்சியகம் திறப்பு – நேர கட்டுப்பாடுகள்!
கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அருங்காட்சியகத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை திறப்பு
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவன் என்று அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை புகழ்மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 340 அறைகளைக் கொண்ட இந்த கட்டிடம், சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் என்ற ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகை மற்றும் அதனுடன் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை காண தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவது உண்டு.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அலகுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
இந்நிலையில் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்ததால் டெல்லியில் தாஜ்மஹால் உள்ளிட்ட பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையில் பொதுமக்கள் வருகை தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் சூழலில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனுடன் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை மீண்டுமாக திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!!
அந்த வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையும் உள்ள மூன்று பிரிவுகளில், முன் பதிவு செய்துள்ள 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர செவ்வாய் முதல் ஞாயிறு வரையுள்ள நாட்களில், காலை 9.30 – 11 மணி வரையும், காலை 11.30 – 1 மணி வரையும், பிற்பகல் 1.30 – 3 மணி வரையும், பிற்பகல் 3.30 – 5 மணி வரையும், ஒரு பிரிவுக்கு 50 பேர் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.