நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையின் சிறப்பம்சங்கள்!
இந்தியாவில் 2023 – 2024ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கி உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் பங்கேற்று உரையாற்றினார்.
ஜனாதிபதி உரை:
இந்தியாவில் 2023- 2024 ம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று துவங்கியது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது என்று கூறினார்.
குடியரசு தின அணிவகுப்பில் முதலிடம் பெற்ற அலங்கார ஊர்தி – முதல்வர் பெருமிதம்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்திய சுதந்திரத்தின் பொற்காலத்தில் ஐந்து ஆன்மாக்களின் உத்வேகத்துடன் நாடு முன்னேறி வருகிறது. இன்றைக்கு இந்தியாவின் சொந்த உற்பத்தி திறன் அதிகரிக்கிறது. அதனால் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்து வருகின்றனர் என்றார். அத்துடன் பெண் குழந்தைகளை காப்போம் என்ற பிரசாரத்தின் வெற்றியை நாம் காண்கிறோம்.
இன்றைக்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி செல்கின்றனர்.பிரதமர் அறிமுகப்படுத்திய கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அடுத்ததாக ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ஏழை மக்கள் வாழ்க்கை காப்பாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது வரை 50 கோடி பேருக்கு மேல் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாட்டில் இன்று ஐடிஆர் தாக்கல் செய்த சில நாட்களில் பணம் திரும்ப பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மக்கள் வெளிப்படை தன்மையுடன் வரி செலுத்துவது ஜிஎஸ்டி மூலம் உறுதி செய்யப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக நாடு பல சாதகமான மாற்றங்களை கண்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கையும் உச்சத்தில் இருப்பதும் இந்தியாவைப் பற்றி உலகின் பார்வை மாறுவது என நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று உரை ஆற்றியுள்ளார்.