ஆப்கானிஸ்தானில் தொடரும் பதற்றம் – 4 காரில் நிரப்பிய பணத்துடன் அதிபர் அஷ்ரப் கனி ஓட்டம்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க வீரர்கள் படிப்படியாக வெளியேறி வருவதால் தலிபான்கள் நாட்டின் அனைத்து பகுதியையும் கைப்பற்றி வருகின்றனர். இதனால் நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பியோடி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
தலிபான்களின் ஆக்கிரமிப்பு:
கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக போர் நடந்ததில் இருந்து அமெரிக்க போர் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு தலிபான்களின் ஆதிக்கம் சற்று குறைந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றத்தில் இருந்து அமெரிக்க வீரர்களை ஆப்கானில் இருந்து படிப்படியாக வெளியேற்றி வருகிறார். இந்த மாத இறுதிக்குள் அனைத்து வீரர்களும் முழுவதுமாக நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு போகும் அகில் !! | Bharathi Kannamma Episode Today Updates | Vijay Tv
இதனை பயன்படுத்தி, ஒரே வாரத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தலிபான்கள் படை. இதனால் நாட்டு மக்கள் பயந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதால் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக, ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளர் நிகிதா செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், ஆப்கானிஸ்தானிலிருந்து நான்கு காரில் நிரப்பட்ட பணத்துடன் ஹெலிகாப்டரில் ஏறி ஆப்கானிலிருந்து அதன் அதிபர் அஷ்ரப் கனி வெளியேறிவிட்டார். பணத்தை ஏற்றும் போது இடமில்லாமல் பல ருபாய் நோட்டுகள் கீழே விழுந்தது. தொடர்ந்து ஆப்கனில் தலிபான்களின் அதிகம் அதிகரித்து வருவதால் மிகவும் பதற்றம் நிலவுவதாக தெரிவித்தார். ஆனால் தலிபான்கள் நாட்டில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.