ஆப்கனில் தாலிபான்களின் புதிய அரசு அமைப்பு – அதிபர் & அமைச்சரவை அறிவிப்பு!

0
ஆப்கனில் தாலிபான்களின் புதிய அரசு அமைப்பு - அதிபர் & அமைச்சரவை அறிவிப்பு!
ஆப்கனில் தாலிபான்களின் புதிய அரசு அமைப்பு - அதிபர் & அமைச்சரவை அறிவிப்பு!
ஆப்கனில் தாலிபான்களின் புதிய அரசு அமைப்பு – அதிபர் & அமைச்சரவை அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் நிருபர்களுக்கு இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசு:

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. அதன்படி நோட்டா படைகள் வெளியேற தொடங்கினர். இது தொடர்பாக அமெரிக்கா அறிவித்த மூன்றே நாட்களில் தலிபான்கள் ஆப்கன் முழுவதையும் கைப்பற்றினர். மேலும் ஆகஸ்ட் 31ம் தேதிகுள் முழுவதும் வெளியேற வேண்டும் இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அமெரிக்க விமானம் மூலம் அமெரிக்க ராணுவ படைகள் முழுமையாக வெளியேறியது. இதனால் ஆப்கான் மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.

தமிழகத்தில் TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித்தேர்வு – புதிய கோரிக்கை!

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி மூன்று வாரங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் தலிபான்கள் முறையாக ஆப்கானில் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மற்றும் அதிபருக்கும் மேலாக சுப்ரீம் லீடர் எனப்படும் உயர் தலைவர் செயல்படுவார். இந்த பதவிக்கு தலிபான் இயக்கத்தின் உச்ச அதிகாரம் பெற்ற முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதாவை நியமிக்க முடிவு செய்யப்பட்டு தலிபான்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. மேலும் தலிபான்கள் தலைமையில் புதிய அரசு தலைமையேற்கும் விழாவிற்கு 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

T20 World Cup 2021 – இந்திய அணி அறிவிப்பு எப்போது? தொடரும் எதிர்பார்ப்பு!

இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தாலிபான்களின் செய்தி தொடர்பாளர், ஆப்கானிஸ்தானில் அமையும் தலிபான்களின் இடைக்கால அரசில் தலைவராக முல்லா முகமது ஹசன் அகண்ட் இருப்பார். வெளியுறவுத்துறை துணை மந்திரியாக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாயும், உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் இருப்பார்கள். மேலும் பாதுகாப்பு மந்திரியாக முல்லா யாக்கூப் பதவி ஏற்பார். அரசை நடத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த மந்திரி சபை அமைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போராட்டங்கள் சட்டவிரோதமானவை. தற்போது ஒரு அரசு அமைக்கப்படும் நிலையில் அந்த அரசிடம் தான் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!