பிரசவத்திற்கு முன் வரை நடித்த “பாரதி கண்ணம்மா” வில்லி பரீனா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனா பிரசவத்திற்கு முன் வரை சீரியலில் நடித்தார் என சீரியல் இயக்குனர் பிரவீன் அவர்களின் மனைவி சாய் ப்ரோமோதிதா தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சின்னத்திரையில் டாப் வரிசையில் இருக்கும் ஒரு குடும்ப சீரியல் ஆகும். இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா குடும்ப வாழ்க்கையை கெடுத்த வில்லி, ஆனால் பிரிந்தாலும் காதல் குறையாமல் இருக்கும் தம்பதி, அவர்களுக்கு இரண்டு அழகான குழந்தைகள் அந்த குழந்தைகளிடம் ஒற்றுமை, மருமகளை மகள் போல பார்க்கும் மாமியார் என விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கதைக்கு ஆணி வேராக இருப்பது வெண்பா கதாபாத்திரம் தான்.
Vijay TV Bigg Boss 5 Promo | பைனலுக்கு போக வேண்டாம் என சொன்ன தாமரை, கோவப்பட்ட சஞ்சீவ்!
வெண்பாவாக நடிகை பரீனா வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் மாசமாக இருந்த அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவனுக்கு ZAYN என பெயர் வைத்துள்ளனர். பிரசவத்திற்கு ஒரு வாரம் முதல் அவர் சீரியலில் நடித்து வந்த நிலையில் அந்த சீரியல் இயக்குனர் பிரவீன் அவர்களின் மனைவி சாய் ப்ரோமோதித்தா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் பிரசவத்திற்கு முன் வரை நடித்தார். அதற்காக பல துயரங்களை தாங்கினார்.
சீரியல் குழுவும் ஈசியாக அந்த கதாபாத்திரத்தை ரீப்ளேஸ் செய்திருக்கலாம். ஆனால் அப்படி நினைக்கவே இல்லை. அவருக்காக நேரம் கொடுக்கப்பட்டது. அவரும் தன்னுடைய முழு உழைப்பையும் அதில் போட்டார். தன்னுடைய குடும்பம் போல நினைத்து பரீனாவிற்காக கதையை மாற்றி அவங்க குழந்தை பெற்று வருகிற வரை காத்திருப்பது எல்லாம் பெரிய விஷயம் தான் என அவர் தெரிவித்துள்ளார்.