Vijay TV Bigg Boss 5 Promo | பைனலுக்கு போக வேண்டாம் என சொன்ன தாமரை, கோவப்பட்ட சஞ்சீவ்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் தாமரை இந்த டாஸ்கில் இருந்து விலக வேண்டும் என சஞ்சீவ் கோவமாக பேசுகிறார்.
பிக்பாஸ் ப்ரோமோ:
தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது 85 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 3 வாரங்களில் இறுதிச்சுற்று நடைபெற இருக்கிறது. போட்டியாளர்கள் தற்போது வரை நட்புக்காக மற்றும் அனுதாபப்பட்டு விட்டுக் கொடுத்து விளையாடி வந்தனர். ஆனால் இனிமேல் அப்படி விளையாட கூடாது என நேற்றைய எபிசோடில் கமல் சொன்னார்.
மேலும் சென்ற வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அக்ஷரா மற்றும் வருண் வெளியேறினார்கள். முதன் முறையான இருவர் வெளியேறியதால் ரசிகர்கள் வருத்தப்பட்டனர். இந்த வாரம் டிக்கெட் டூ பைனல் டாஸ்குகள் நடைபெற இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட வேண்டும். அப்போது போட்டியாளர்களின் யாரு இந்த டிக்கெட் பெற தகுதி இல்லாதவர்கள் என பேசி அவரை வெளியேற்ற வேண்டும். அப்போது பிரியங்கா தாமரையிடம் நீ ஜெயிக்க வேண்டுமா என கேட்க, யார் ஜெயிச்சாலும் எனக்கு சந்தோசம் என தாமரை சொல்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வர இருக்கும் திருப்பங்கள் – கண்ணன், ஐஸ்வர்யாவின் பிளான்!
உடனே கோவப்பட்ட சஞ்சீவ் ரொம்ப அழகா பேசுறீங்க பிக்பாஸ் பற்றி எதுவும் தெரியாமல் வந்தீங்களாம் உங்க மாமியார் பார்ப்பங்களாம் உங்களுக்கு எதுவுமே தெரியாமல் நீங்க ஷோவிற்கு வந்துருக்கீங்க என சொல்ல, தாமரை சத்தமாக இங்க வாங்களேன் உக்காந்து பேசுவோம் என சொல்ல, எனக்கு நடந்ததை வைத்து தான் நான் முடியும் என தாமரை சொல்கிறார். பிரியங்கா யாரு ஜெயிச்சா அதை விடு உனக்கு ஜெயிக்க வேண்டுமா என கேட்க எனக்கு மக்கள் ஜெயிக்க வச்ச சந்தோசம் தான் என சொல்கிறார். பின் பிரியங்கா நீ ஜெயிக்க வேண்டுமா என கேட்க நான் ஜெயிக்க வேண்டாம் என தாமரை சொல்கிறார்.