தமிழகத்தில் ‘இந்த’ இடங்களில் நீங்கள் வசிப்பவரா? அப்போ நாளைக்கு உஷாரா இருங்க – மின்தடை அறிவிப்பு!

0
தமிழகத்தில் 'இந்த' இடங்களில் நீங்கள் வசிப்பவரா? அப்போ நாளைக்கு உஷாரா இருங்க - மின்தடை அறிவிப்பு!
தமிழகத்தில் 'இந்த' இடங்களில் நீங்கள் வசிப்பவரா? அப்போ நாளைக்கு உஷாரா இருங்க - மின்தடை அறிவிப்பு!
தமிழகத்தில் ‘இந்த’ இடங்களில் நீங்கள் வசிப்பவரா? அப்போ நாளைக்கு உஷாரா இருங்க – மின்தடை அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகள் அனைத்தும் மாதந்தோறும் சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (அக்.13) நாமக்கல் பகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் துணை மின் நிலையத்தில் மழைக்காலங்களில் ஏராளமான பழுதுகள் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக சாலையோரங்கள் மின் கம்பங்கள் விழுகின்றன. இதையடுத்து மின் இணைப்பு கம்பிகளில் துண்டிப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு மின்சாரம் சரி வர கிடைக்காமல் இருக்கக்கூடும் என்பதால் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மின்சாரம் விநியோகிக்கப்படும்.

அந்த வகையில் நாளை நாமக்கல் பகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் ரத்து செய்யப்படும் என நாமக்கல் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். அதனால் கீழ்க்கண்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை (அக். 13) மின்தடை – மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கை!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, கஸ்தூரிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, எருமப்பட்டி, வரகூா், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், நவலடிப்பட்டி, பவித்திரம், வரதராஜபுரம், முட்டான்செட்டி, சிங்களகோம்பை, பவித்திரம்புதூா், காவக்காரப்பட்டி, செல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!