தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை (அக். 13) மின்தடை – மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கை!
தமிழக அரசு உத்தரவின் படி மாதந்தோறும், மாநிலம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி நாளை (அக்13) மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மின்தடை பகுதிகள்:
தமிழக அரசின் ஒரே குறிக்கோளாக இருப்பது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தான். அதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மின்சார விபத்துகளை தடுக்கவும், மின்தடை ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை ( அக். 13) கரூர் மாவட்டம் ஆண்டிசெட்டிபாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
அதனால் ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் பகுதியில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஆண்டிசெட்டிபாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிசெட்டிபாளையம், கோடந்தூர், தென்னிலை, காட்டுமுன்னூர், வடகரை, சி. கூடலூர், கார்வழி, காட்டம்பட்டி, பெரியதிருமங்கலம், தொக்குப்பட்டி, அரங்கபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் TCS.. Work from home பணியாளர்கள் இனி ‘இதை’ கட்டாயம் செய்ய வேண்டும்!
Exams Daily Mobile App Download
மேலும் ராஜபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும், சின்னதாராபுரம், டி. வெங்கிடாபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, புஞ்சைகாளகுறிச்சி,அணைப்புதூர், எலவனூர், தொக்குப்பட்டிபுதூர், நஞ்சைக்காளகுறிச்சி, ராஜபுரம், சூடாமணி, மற்றும் ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும், கருடையாம்பாளையம், நெடுங்கூர், க. பரமத்தி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்