திருப்பூரில் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 10) அன்று தளவாய்பட்டணத்தில் உள்ள ஓர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஆங்காங்கு சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப் போவதாக அம்மாவட்ட செயற்பொறியாளர் பாலன் அறிவித்துள்ளார்.
மின்தடை:
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பாதையில் நிகழும் சில பிரச்சனைகளால் விபத்துகள் நேரிடுகிறது. இவற்றை தவிர்ப்பதற்காகவே மாதம் ஒருமுறை பராமரிப்பு பணி கட்டாயமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பணி நடைபெறும் பொழுது ஆங்காங்கே மின் விநியோகமும் தடை செய்யப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை – ரூ.10,000 முதல் ரூ.30,0000 வரை!
அவ்விதமாக நாளை தளவாய்பட்டணத்தில் உள்ள செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. எனவே ஜூன் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம் உட்பட ஊத்துப்பாளையம், சென்னாக்கல் பாளையம், கொட்டமுத்தாம்பாளையம்.
Exams Daily Mobile App Download
தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.