தமிழகத்தில் ஜூலை 24 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் திருப்பத்தூர் பகுதியில் துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24.07.2021) மின்தடை செய்யப்படும் என மின் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா ஊரடங்கின் போது மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அதிக முறை மின்தடை செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 9 மாதம் மின் பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் தற்போது மாவட்டம் வாரியாக மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் தான் முன்னறிவிப்பின்றி குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Airtel வழங்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் – முழு விவரம்!!
அதனை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகம் முழுவதும் அனைத்து மின் நிலையங்களிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் குறிப்பிட்ட நேரம் மின் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின் வாரியம் மின் விநியோகத்தை மின் வாரியம் தடை செய்து வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் அணைக்கட்டு மற்றும் பள்ளி கொண்டா பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் கெங்கநல்லூர், ஊனை வாணியம்பாடி, அப்புக்கல், ஊனை, ஊனை மோட்டூர், வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி.குப்பம், ஒங்கப்பாடி, குடிசை, புலிமேடு, அத்தியூர், சிவநாதபுரம், பள்ளிகொண்டா, ராமாபுரம், கந்தநேரி, வெட்டுவானம், பிராமண மங்கலம் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்று வட்டாரங்களிலும் நாளை (24.07.2021) மின் தடை செய்யப்படும் என அப்பகுதியின் மின் கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.