தமிழகத்தில் செப்.24ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!
தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின் புகார் மையம் அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை, ஊதியம் – டிஜிபி சுற்றறிக்கை!
அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மின்தடை ஏற்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? அதிர்ச்சியில் மக்கள்!
வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், வ. புதுப்பட்டி, கோட்டையூர், அர்ச்சுனாபுரம், ஆகாசம்பட்டி, புதூர், சேது நாராயணபுரம், குட்ட மலை, அணைக்கரைப்பட்டி, மாவூத்து, ரங்கம்பாளையம், எஸ்.கொடிக்குளம், கூமாபட்டி, அத்திக்கோயில், பிளவக்கல் அணை, கோவிலாறு அணை, கிழவன் கோயில், நெடுங்குளம், அமச்சியார்புரம் காலனி, தாமரைக்குளம், ராமசாமியாபுரம், கான்சாபுரம், செவலூரணி, தைலாபுரம், நல்லூர்பட்டி, சீலநாயக்கன்பட்டி, துலுக்கப்பட்டி, அக்னாபுரம், தம்பி பட்டி, அகத்தாபட்டி, துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், புதூர்,மதுராபுரி, கல்யாணிபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர், வலையன்குளம், இலந்தைகுளம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.