தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? அதிர்ச்சியில் மக்கள்!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட தகுதி இல்லாதோருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செப்.13 அன்று 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் ஏழைகள் மட்டும் பயன்பெறும் வகையில் ஒரு சில பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA மற்றும் DR உயர்வுடன் கூடுதல் சலுகைகள் – முழு விவரம்!
அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் முழுவதுமாக சேகரிக்கப்பட்டன. அவ்வாறு பெறப்பட்டதில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் அதிக முறைகேடு நடந்துள்ளது என்றும் ஏழை, எளிய மக்கள் பயிர்க்கடன் தள்ளுபடியில் பயன் பெறவில்லை என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனை கருத்தில் கொண்டு தற்போது நகைக்கடன் தள்ளுபடியில் அவ்வாறு தவறுகள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற நோக்கில் ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நகைக்கடன் தள்ளுபடியில் ஒரு சில பகுப்பாய்வுகளை சில தகுதியின் கீழ் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் – முதல்வர் தொடங்கி வைப்பு!!
இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தால் அவர்களிடம் 5 பவனுக்கு அதிகமாக வழங்கப்பட்ட நகைக்கடன்களை விரைவாக வசூலிக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ .சண்முகசுந்தரம் நேற்று அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.