தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை, ஊதியம் – டிஜிபி சுற்றறிக்கை!
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
காவலர்களுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது காவலர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களை தொற்றிலிருந்து காக்கவும் பேருதவி புரிந்தனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனாவை கண்டு மக்கள் அனைவரும் அஞ்சி வீடுகளில் முடங்கிய போதிலும் காவலர்கள் சாலைகளில் நின்று பணியில் ஈடுபட்டனர். கொரோனா பரவ தொடங்கியது முதல் காவலர்களின் பணி இரு மடங்காக உயர்ந்தது. இந்த அசாதாரண சூழலில் தங்கள் உடலை கவனித்து கொள்ள முடியாத நிலையில் ஏராளமான காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? அதிர்ச்சியில் மக்கள்!
தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். தற்போது மன அழுத்தம், பணிச்சுமை காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் காவலர்களுக்கு ஓய்வுக்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். மேலும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA மற்றும் DR உயர்வுடன் கூடுதல் சலுகைகள் – முழு விவரம்!
அதனால் காவலர்களின் நலனுக்காக அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும். காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் அன்று காவல் துறையின் சார்பாக மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.