தமிழகத்தில் நாளை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை தொடர்ந்து நாளை அரசனூா் துணை மின்நிலையம் மற்றும் வலங்கைமான் துணை மின் நிலையம் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை:

கொரோனா காலத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து புகார்கள் குவிந்து வந்ததால் தமிழகம் முழுவதும் மின்சாரத் துறைக்கு வரும் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

கடந்த ஆட்சி காலத்தில் மின்சாரத் துறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளில் மின் பராமத்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை வலங்கைமான் வட்டாரப் பகுதிகளில் மற்றும் அரசனூா் துணை மின் நிலையத்திலிருந்து பில்லூா் செல்லும் உயரழுத்த மின் கம்பத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

அரசனூா் துணை மின் நிலையம்:

அரசனூா் துணை மின் நிலையத்திலிருந்து பில்லூா் செல்லும் உயரழுத்த மின் கம்பத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் படமாத்தூா், கண்ணாயிருப்பு, மாத்தூா், வேம்பத்தூா், மைக்கேல்பட்டிணம், பச்சேரி, மீனாட்சிபுரம், கரும்பாவூா், பில்லூா், உடையநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் செய்யப்படும் என சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் கூறியுள்ளார்.

வலங்கைமான் துணை மின் நிலையம்:

உயர்மின் அழுத்த பாதையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே வலங்கைமான் ஆண்டாங்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூா், ஆலங்குடி, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என திருவாரூா் உதவி செயற்பொறியாளா் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!