தமிழகத்தில் நாளை (பிப்.24) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை பெரியகுளம் புகா் பிரிவு கிழக்குப் பகுதியில் ,மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி அறிவித்துள்ளார்.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற திமுக கட்சி அனைத்து துறைகளிலும் பல்வேறு நல்ல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். இந்த வகையில் மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தும் விதமாக மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள், துணை மின் நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் மின் துண்டிப்பு களை தடுப்பதற்கு, தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அறிவுறுத்தல்!
இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படுவது வழக்கம் ஆகும். இந்த மின்தடை குறித்து முன்னதாக மின்வாரிய செயற்பொறியாளருக்கு அறிவிக்கப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் அளிக்கப்படும். இந்த வகையில் நாளை (24. 02.2022) பெரியகுளம் உப மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு பெரியகுளம் பிரிவில் உயர்மின் அழுத்த கம்பிகள் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – இந்தியாவில் புது சட்டம் அமலாகுமா?
இதனால் எ.புதுப்பட்டி, எண்டப்புளி, எ.காமாட்சிபுரம், வேல்நகா், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, டி.வாடிப்பட்டி, தண்ணீர் பந்தல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளர் பாலபூமி செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.