தமிழகத்தில் நாளை (டிச.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக சனிக்கிழமை (டிச.4) விருதுநகா் அருகே ஜிஎன் பட்டி பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தற்போது பருவ மழைக்காலம் என்பதால் ஏராளமான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காட்சி அளிக்கிறது. மேலும் சாலைகளில் மின் கம்பங்கள் அநேக இடங்களில் சாய்ந்து விழுந்துள்ளன. அத்துடன் மின் இணைப்பு கம்பிகளில் பிளவு ஏற்பட்டு ஏராளமான இடங்களில் விழுந்துள்ளது. அதனால் இரவு நேரங்களில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது.
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஆகவே தமிழக அரசு மின் விபத்துகள் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து முடித்து வருகிறது. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதனால் தமிழக அரசு மாதந்தோறும் மின் தடை அறிவிப்பை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறது. இதன் விளைவாக விருதுநகா் அருகே ஜிஎன் பட்டியில் சனிக்கிழமை (டிச.4) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் விருதுநகா் அருகே ஜிஎன் பட்டி பகுதியில் நாளை காலை 8 முதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிச.4ம் தேதி மதியம் வரை பள்ளிகளை மூட உத்தரவு – ‘ஜவாத்’ புயல் எதிரொலி!
ஜிஎன் பட்டி துணை மின் நிலையத்தால் மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆமத்தூா், மூளிப்பட்டி, நாட்டாா்மங்கலம், வெள்ளூா், சிதம்பராபுரம், சித்தநாயக்கன் பட்டி, புதுக்கோட்டை, செவலூா், காரிசேரி, மத்தியசேனை, முத்தலாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை முதல் மின் விநியோகம் இருக்காது என்றும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் உடனடியாக மின் விநியோகிக்கப்படும் என்றும் ஜிஎன் பட்டி துணை மின் நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.