டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது நிலவும் கோவிட்-19 தொற்று மற்றும் ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு கவுதம் புத் நகரின் காவல் ஆணையரகம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு அவற்றை முறையாக மக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் சில மாதங்களுக்கு முன்னர் குறைந்து வந்தது. இதனால் கட்டுப்பாடுகளில் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் சில பகுதிகளில் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் சமீப நாட்களாக கோவிட்-19 தொற்று நோய் பதிவாகி வருகிறது.

டிச.4ம் தேதி மதியம் வரை பள்ளிகளை மூட உத்தரவு – ‘ஜவாத்’ புயல் எதிரொலி!

இதனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் தற்போது நிலவும் கோவிட் தொற்று நோய் மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு கவுதம் புத் நகரின் காவல் ஆணையரகம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 144 தடையை நீட்டித்துள்ளது. முன்னதாக டிசம்பர் 23ம் தேதி முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளில் சமூக விரோதிகள் குழப்பம் விளைவித்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், கோவிட் பரவுவதை தடுக்கவும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. அரசு உத்தரவின் படி மாவட்டத்தில் அனுமதியின்றி சமூக கூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு!

இந்த உத்தரவில், கவுதம் புத்த நகர் போலீசார், “இந்த நேரத்தில் பணியாளர் தேர்வாணையம் எய்ம்ஸ், யுஜிசி நெட் மற்றும் சிபிஎஸ்இ வாரியம் போன்ற பல போட்டித் தேர்வுகள் நடைபெறும் என்றும், இந்த தேர்வுகளை சுமுகமாக நடத்த நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்”என்றும் கூறியுள்ளனர். மேலும் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் வாய்ப்பை புறக்கணிக்க முடியாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

  • அனைத்து மக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • எந்தவொரு மத, அரசியல், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கும் நடத்துவது தொடர்பாக, அதிகாரிகளிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.
  • மால்கள், உணவகங்கள், ஜிம்கள் மற்றும் அரங்கங்கள் 50 சதவீத மக்களுடன் தொடர்ந்து செயல்படும்.
  • திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளின் போது 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக, தேர்வு மையத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவில் போட்டோஸ் டாட் கடை திறக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • அரசின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் குற்றம் சாட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!