தமிழகத்தில் நாளை (டிச.30) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது.
தமிழ் இணைய கல்விக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.10ம் தேதி கடைசி நாள்!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியந்துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலான்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, லிங்கமநாயக்கன்புதூர், சுங்காரமுடக்கு, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, சிக்கனூத்து, அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதம், மாதாந்திர வருமானம் & முழு விபரங்கள் இதோ!
அதனை தொடர்ந்து திருப்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்கம், கல்லூரி சாலை, ஓடக்காடு, பங்களா பேருந்து நிறுத்தம், காவேரி வீதி, ஸ்டேஷன் வீதி, ஹவுசிங் , முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ.லே. அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருக்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.