ஆகஸ்ட் 25ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் திருச்சி மாவட்டம் அதவத்தூர் பகுதியில் துணை மின் நிலையத்தில் அவசர கால பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 25ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் மின்சார துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் மின் கட்டணம் செலுத்த மக்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. மின்தடை தொடர்பாக புகார் தெரிவிக்க மின்னகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புகார் அளித்தால் 2 நாட்களுக்குள் மின் சம்பந்தப்பட்ட புகார்கள் நிவர்த்தி செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Reliance Jio நிறுவனத்தின் ரூ.500க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம்!
அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது திருச்சி மாவட்டம் அதவத்தூர் பகுதியில் துணை மின் நிலையத்தில் அவசர கால பணிகள் நடைபெறுவதால் நாளை மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
இனியனூர், அல்லித்துறை, போதவூர், கீழவயலூர், சுண்ணாம்புகாரன் பட்டி, அதவத்தூர் சந்தை, அயிலாப்பேட்டை, புலியூர், தாயனுர், சுப்பையாபுரம், மல்லியப்பத்து மஞ்சான்தோப்பு, வியாழன்மேடு, கோப்பு, மேலப்பட்டி, பள்ளக்காடு, கொய்யாத்தோப்பு, வாசன் சிட்டி, குழுமணி, கீரி கல்பட்டி, ஒத்தக்கடை, பெரிய கருப்பூர், போசம்பட்டி, வயலூர் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.