கிராம ஊராட்சி பெண் அலுவலரின் மகப்பேறு விடுமுறை ஓராண்டாக உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!
ஊராட்சி துறையில் பெண் கிராம ஊராட்சி அலுவலருக்கான மகப்பேறு கால விடுப்பு ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இன்று அறிவித்து உள்ளார்.
பிரசவ விடுமுறை உயர்வு:
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சில நாட்களுக்கு முன் தொடங்கி கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடந்து வருகிறது. இந்த ஆண்டு காகிதமில்லா பட்ஜெட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு திங்கள் கிழமையான நேற்று தொடங்கி அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான இன்று, சட்டசபை கூட்டத்தொடர் முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 25ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
நேற்று துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சபை முன்னவர் துரைமுருகனை பாராட்டி தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, தம் கண்ணீர் உணர்ச்சிப் பெருக்கால் துரைமுருகன் நன்றி சொன்ன நிகழ்வு நடைபெற்றது. இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இது குறித்து விளக்கம் தர எழுந்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள், ஊரக வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படும் விருதுகள் குறித்து அறிவித்து, அதன் வளர்ச்சி நிதி குறித்த கருத்துக்களை தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து பேசிய அவர், ஊராட்சி துறையில் பணிபுரிந்து வரும் பெண் கிராம ஊராட்சி அலுவலருக்கான பிரசவ விடுமுறை என்பது ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன், 9 மாதங்களாக மட்டுமே இருந்த பிரசவ விடுமுறை நாட்கள் தற்போது உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு அதிகரிப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.