தூத்துக்குடியில் நாளை (ஏப்ரல் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் குலசேகரன்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அவ்வப்போது மின்கம்பங்களில் பழுதுகள், மின் இணைப்பு துண்டிப்பு, மின் கசிவு ஆகியவை ஏற்பட்டு மக்களுக்கு சிரமத்தை அளிக்கிறது. மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின் கசிவின் காரணமாக பல இடங்களில் எதிர்பாராத விதமாக விபத்துக்களும் ஏற்படுகின்றன. அதிலும் இரவு நேரங்களில் தான் அதிக அளவில் மின்பழுது ஏற்பட்டு மக்களுக்கு சிரமத்தை அளிக்கிறது. இந்தமின்கம்பங்களில் ஏற்படும் பாதிப்பை சரிப்படுத்த தமிழக அரசும் அவ்வப்போது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த தங்க விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
அதாவது மாதந்தோறும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் மின் துண்டிப்பு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் வேறு வேறு தினங்களில் மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், மின்தடை ஏற்படும் பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவுபடுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள கல்லாமொழி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்யப்படவுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் இதோ, ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், மணப்பாடு, குலசேகரன்பட்டிணம், சிறுநாடார் குடியிருப்பு மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் அறிவித்துள்ளார்.