ஆகஸ்ட் 4 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நாளை (04.08.2021) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக அனைத்து பகுதிகளிலும் மின் ஊழியர்கள் மூலமாக மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் இணைப்புகள் சரிபார்த்தல், மின் கம்பிகள் மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் முன்னறிவிப்புடன் மின்தடை செய்யப்படுகிறது. மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் தங்கு தடையின்றி வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கடைகள் இரவு 10 மணிவரை திறக்க அனுமதி – முழு ஊரடங்கு தளர்வுகள் அமல்!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் பொம்மைய கவுண்டன்பட்டி, அல்லிநகரம், ஜி ஹெச் ரோடு, பெரியகுளம் ரோடு, பாரஸ்ட் ரோடு, வயல்பட்டி, பங்களாமேடு, மதுரை ரோடு, பிசி பட்டி முத்துதேவன்பட்டி, மாரியம்மன் கோவில் பட்டி, பூதிப்புரம், சத்திரப்பட்டி, வளழ யாத்து பட்டி, அரண்மனை புதூர்,பள்ளபட்டி, திருமலாபுரம்.
TN Job “FB Group” Join Now
அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (04.08.2021) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தேனி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் மின் கணக்கீடு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் அதிகம் இருப்பதாக மின் நுகர்வோர்கள் புகார் அளித்து வருகின்றனர். இதை கேட்டறிந்த மின்சாரத்துறை அமைச்சர் மின் கட்டணம் அதிகம் இருப்பதாக கருதுவோர் தொலைபேசி மூலம் புகார் அளித்தால் ஆய்வு செய்து மாற்றம் இருந்தால் மின் கட்டணம் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.