கடைகள் இரவு 10 மணிவரை திறக்க அனுமதி – முழு ஊரடங்கு தளர்வுகள் அமல்!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் முழு ஊரடங்கு தளர்வுகளை தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி மாநிலம் முழுவதும் கடைகளின் இயக்க நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருவதையடுத்து மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் புனே, கோலாப்பூர், சதாரா, சாங்லி உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வுகளை அனுமதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் அனைத்து அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற கடைகளும் மும்பையில் தினமும் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். அதே நேரத்தில் மாலை 4 மணி வரை உணவகங்கள் 50% இருக்கை திறனில் செயல்பட அனுமதிக்கப்படும்.
சேமிப்பு கணக்கிற்கு அதிக வட்டி தரும் வங்கிகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இதனிடையே மும்பை மாநகராட்சியில் நீச்சல் போன்ற நீர் விளையாட்டுகளைத் தவிர அனைத்து உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹால் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்கூறிய தளர்வுகளைத் தவிர, மற்ற அனைத்து நடவடிக்கைகளும் முந்தைய உத்தரவின்படி பின்பற்றப்பட வேண்டும்.
மால்கள் மற்றும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். உள்ளூர் ரயில்கள் அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே செயல்படும். அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து தனியார் அலுவலகங்கள் வார நாட்களில் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். பொது மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும். இதனிடையே மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் உள்ள கடைகள் இனி இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், தொற்று இன்னும் அதிகரித்து வரும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 2) ஒரு நாளில் 4,869 புதிய பாதிப்புகளுடன் 90 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகளின் கீழ் மஹாராஸ்டிராவின் 14 மாவட்டங்களைத் தவிர, மற்ற எல்லா மாவட்டங்களிலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன் படி,
- அனைத்து அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் வார நாட்களில் இரவு 8 மணி வரையிலும் சனிக்கிழமை மாலை 3 மணி வரையிலும் திறந்திருக்கும்.
- மால்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
- அனைத்து பொது தோட்டங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறந்திருக்கும்.
- அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் முழு திறனுடன் செயல்பட முடியும்.
TN Job “FB Group” Join Now
- உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், முடி வெட்டும் நிலையங்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் 50% திறனுடன் வார நாட்களில் இரவு 8 மணி வரையும் மற்றும் சனிக்கிழமை மாலை 3 மணி வரை திறந்திருக்கும்.
- இந்த சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
- அனைத்து திரையரங்குகள், நாடக அரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மூடப்படும்.
- மேலும் ஹோட்டல்கள் மற்றும் கடைகளின் இயக்க நேரம் இரவு 9 வரை அதிகரிக்கப்பட்டு ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- மாநிலத்தின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.