ஜூலை 31 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நாளை (ஜூலை 31) மின்தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மாநிலம் தோறும் பல இடங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் மின்தடை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் முதல் மின்சார பராமரிப்பு பணிகள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக பலர் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் மூலமாக வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.
PhonePe, Google Pay, Paytm கணக்கை பிளாக் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
இதனால் மாவட்ட வாரியாக மின்தடை ஏற்படும் பகுதி மற்றும் நேர விபரங்களை முன்னதாகவே மின்வாரியம் வெளியிட்டு வருகிறது. அதன்படி மன்னார்குடி பகுதியில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 31) மின்சார தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சா.சம்பத் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில் மன்னார்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், நாவல் பூண்டி, கோரையாறு, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்களம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.