தமிழகத்தில் செப்.23ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் சிவகாசி , பாரைப்பட்டி ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செப்.23ம் தேதி) மின் விநியோகம் தடை செய்யப்படும் என மாவட்ட மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு – அரசாணை வெளியீடு!
கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது என கூறினார். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை சிவகாசி, பாரைப்பட்டி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.
TN TRB போட்டித் தேர்வில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – அரசு வெளியீடு!
இதனால் பாரைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில், ஜக்கம்மா கோயில், பஸ் ஸ்டாண்ட், நாராயணபுரம் ரோடு, சுற்றுப்பகுதிகள், சிவகாசி ஆர்பன், அண்ணாநகர், காரனேசன் காலனி, பழனி ஆண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் ரஸ்தா,அண்ணா காலனி, சுற்றுப்பகுதிகள் நாராயணபுரம், லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், அண்ணாநகர், அம்மன் நகர்,காமராஜபுரம், 56 வீட்டுக் காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாச நகர், பர்மா காலனி, போலீஸ் காலனி,முத்துராமலிங்கம் நகர்,இந்திரா நகர், முருகன் காலனி, எம்ஜிஆர் காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.