தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு – அரசாணை வெளியீடு!
தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாரிசுகள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளாக இருந்தால் அந்த ஊழியர்கள் ஒரு ஆண்டில் 6 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு விடுப்பு
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் ஓய்ந்திருக்கும் சூழலில் அனைத்து விதமான சேவைகளும் தற்போது மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கின் போது மூடப்பட்டிருந்த அரசுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் முறையான நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
TN TRB போட்டித் தேர்வில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – அரசு வெளியீடு!
அந்த வகையில் சட்டமன்ற பேரவையின் போது அரசு ஊழியர்களுக்கான சில முக்கிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கான அடிப்படை விதிகளில் சில திருத்தங்களை செய்து புதிய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை பெற்றுள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – HDFC வங்கியில் வீட்டு கடன் வட்டி குறைப்பு!
இது தொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் சராசரியாக ஆறு நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.