TN TRB போட்டித் தேர்வில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – அரசு வெளியீடு!
TRB நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வுக்கு பார்வையற்றவர்களுக்கான பதிலி எழுத்தர்களை அனுமதித்துள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் பணியிட தேர்வு:
2019 ஆம் ஆண்டு TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த வாரம் விசாரணைக்கு வந்த நிலையில் பார்வையற்றோருக்கான பதிலி எழுத்தர்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படாமல் மீண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – HDFC வங்கியில் வீட்டு கடன் வட்டி குறைப்பு!
அதை தொடர்ந்து இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என கூறப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கான பதிலி எழுத்தர்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே காலியாக உள்ள 2207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு வீடு வாடகைப்படி நிறுத்தம் – அரசாணை வெளியீடு!
அதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வானது நவம்பர் 13 ,14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பார்வையற்றவர்களுக்கான பதிலி எழுத்தாளர்களை அனுமதித்து தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாததால் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வுக்கு பதிலி எழுத்தர்களை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.