தமிழகத்தில் நாளை (மார்ச் 19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அவ்வப்போது மின்கம்பங்களில் கோளாறு ஏற்பட்டு மின் கசிவுகள் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இதனால் தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது. இந்த மின்னணு துண்டிப்பினால் மின்கசிவு ஏற்பட்டு பல இடங்களில் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. இந்த மின்கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய தமிழக அரசும் அதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் இதோ!
அனைத்து பகுதிகளிலும் ஒரே நாளில் மின்தடை செய்யப்படுவது இல்லை. மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளும் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பணி செய்யவுள்ளதால் நாளை மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மார்ச் 19 விடுமுறை!
நாளை (மார்ச் 19) அருப்புக்கோட்டை பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்: அருப்புக்கோட்டை நகர், பாளையம் பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி பஞ்சாலை, வெம்பூர், தமிழ்ப்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம், பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர பணி நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் இரா. கண்ணன் தெரிவித்துள்ளார்.