தமிழகத்தில் நாளை (அக்.1) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரை நத்தம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக அய்யர் பங்களா பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதற்கான நேரம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின் புகார் மையம் அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி – ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவு!
இதன் மூலம் மின் நிலையங்களில் உள்ள மின் சார்ந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்தடை தொடர்பாக மின்வாரியம் முன்னதாக அப்பகுதி மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கிறது. இது குறித்த மின் அறிவிப்பால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை மின்தடைக்கு முன்னரே முடிக்க உதவியாக உள்ளது. மேலும் நாளை மின்தடை ஏற்படும் பகுதி குறித்த விவரங்களை மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்து உள்ளார்.
அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு – அரசு அனுமதி!
தமிழகத்தின் மற்ற பகுதிகளை தொடர்ந்து நத்தம் சாலையில் நடைபெறும் மேம்பால பணிக்காக அய்யர் பங்களா பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அய்யர்பங்களா, திலக் நகா், ஸ்ரீநகா், எழில் நகர், சக்தி நகர், சென்ட்ரல் எக்ஸைஸ் காலனி, திருப்பாலை பிரதான சாலை, பாரத் நகா், அய்யாவு தேவா் நகா், அய்யப்பன் நகா், கிருஷ்ணன் நகா், கோபாலபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.