தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி – ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவு!
தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,127 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க முடிவு செய்து ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை:
தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் 822 தொடக்க, 99 நடுநிலை, 108 உயர்நிலை மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 1,127 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஆங்கில வழியில் பேசுவதற்கு ஆர்வமாக உள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் சோ.மதுமதி அவர்கள் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் மற்றும் உயர் / மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணை கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு – அரசு அனுமதி!
அக்கடிதத்தில் மாணவ / மாணவியர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி வழங்கும் விதமாக ஒவ்வொரு பள்ளியிலும் இருந்து ஒரு ஆசிரியர் வீதம் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. அத்தகைய பயிற்சியானது தொண்டு நிறுவனம் மூலமாகவோ அல்லது வாலன்டியர்ஸ் மூலமாகவோ அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் கைபேசியின் வாட்ஸ் ஆப்பில் வழங்கப்படவுள்ளது. அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை – கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியீடு!
எனவே ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பயிற்சி பெறவுள்ள ஆசிரியரின் பெயர், கைபேசி எண் மற்றும் வாட்ஸ் ஆப் எண் போன்றவற்றை அக்கடித்ததுடன் சேர்த்து மின்னஞ்சல் மூலமாக, கூகிள் சீட் மூலமாக 29.09.2021க்குள் விரைந்து அனுப்புமாறு ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் மற்றும் உயர் / மேல்நிலை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.