அக்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பு – அரசு அனுமதி!
மேகாலயா மாநிலத்தில் நாளை (அக்டோபர் 1) முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டுமாக திறக்க மேகாலயா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு நேற்று (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘மேகாலயா மாநிலத்தில் நாளை (அக்டோபர் 1) முதல் கிராமப்புறங்களில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை – கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியீடு!
மேலும் நகர்ப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மட்டுமே 1 முதல் 12 வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும். இதற்கிடையில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது பெற்றோரின் சம்மதத்தை பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு கற்பித்தல் நேரம் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணிநேரங்கள் மட்டுமே இருக்கும். மேலும் பள்ளிகளில் கலாச்சாரக் கூட்டங்கள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது.
குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவித்தால் வெகுமதி – தமிழக காவல்துறை டிஜிபி அறிவிப்பு!
தவிர பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்கவும் மற்றும் எந்த அவசர சூழ்நிலைக்கும் உள்ளூர் சுகாதார துறைகளுடன் தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும், அப்படி தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் கட்டாய RT PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பள்ளித் தலைவரிடம் சோதனைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஒரே சமயத்தில் ஒரு வகுப்பில் 15 முதல் 20 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.