தமிழகத்தில் நாளை (நவ.29) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்குடி அருகே கல்லல் துணைமின் நிலையத்தில் மின்பராமரிப்பு பணி நாளை (நவ.29) மேற்கொள்ளபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட வாரியாக மின்பராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மின்பராமரிப்பு பணிகளானது தற்போது மற்றும் எதிர்காலத்தில் தடையில்லா மின்சாரம் மக்களுக்கு வழங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், எதிர்காலத்தில் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் மின்பராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின்பராமத்து பணிகள் குறிப்பிட்ட பகுதிகளின் துணைமின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும்.
அவ்வாறு மின்பராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட துணைமின் நிலையத்தின் கீழ் பயன்பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும். மின்தடை செய்தியானது மக்களின் நலன் கருதி முன்கூட்டியே அந்த குறிப்பிட்ட மின்வாரியத்தால் செய்திக்குறிப்பு அல்லது சமூக வலைத்தளம் மூலம் தெரிவிக்கப்படும். அந்த வகையில் காரைக்குடி அருகே கல்லல் துணைமின் நிலையத்தில் நாளை நவ.29ம் தேதி மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறையில் 6,000+ காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு வெளியீடு!
அதன்படி கல்லல், செவரக்கோட்டை, சாத்தரசன்பட்டி, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், செம்பனூர், பாகனேரி, கண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும். மேலும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி மற்றும் கூத்தனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும். அதாவது மேல் குறிப்பிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று காரைக்குடி மின்கோட்ட செயற்பொறியாளர் பி.ஜான்சன் தெரிவித்துள்ளார்.