தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை - விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை - விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!

சிவகங்கை மாவட்டத்தில் அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பணியில் நேரடி காப்பீட்டு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதியு, விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அஞ்சல் துரையின் கீழ் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய காப்பீட்டு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நேரடி காப்பீட்டு முகவர் பதவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பி.ஹஜசைன் தெரிவித்துள்ளார்.

1950 முதல் பதிவான ஆவணங்களுக்கான வில்லங்க சான்றிதழ்கள் – ரூ.24 கோடி ஒதுக்கீடு!

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 முதல் 50 வயதிற்குள் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு வேலை தேடுவோர், சுயதொழில் செய்வோர், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் திட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்களாக கருதப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு வணிகத்துக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

விண்ணப்பத்துடன் பான், ஆதார் கார்டு, கல்வி சான்று நகலுடன் சிவகங்கை அஞ்சல் கோட்டத்திற்கு பதிவு அல்லது விரைவு தபால் மூலம் வரும் டிச.4ம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்ப வேண்டிய முகவரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர் அலுவலகம், சிவகங்கை – 630-561. இந்த காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்த மேலும் விபரங்கள் அறிய 04575 245 129 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!