1950 முதல் பதிவான ஆவணங்களுக்கான வில்லங்க சான்றிதழ்கள் – ரூ.24 கோடி ஒதுக்கீடு!
தமிழக அரசு துறை ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காகித வடிவிலான 2.22 கோடி பக்க ஆவணங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறைக்கு மாற்ற ரூ.24.56 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் முறை:
இந்த நவீன உலகில் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அலுவலகங்களிலும் உள்ள ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதாவது தொழிநுட்ப வளர்ச்சிக்கு முந்தைய காலத்தில் காகித வடிவில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. அத்தகைய ஆவணங்கள் பாதுகாப்பானதாக இல்லை என்பதால் டிஜிட்டல் முறை பின்பற்றப்பட்டது. அந்த வகையில் இதுவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட வருடங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக போக்குவரத்து துறையில் 6,000+ காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு வெளியீடு!
அதாவது சார் பதிவாளர் அலுவலகங்களில் தற்போதைய நிலவரப்படி1974 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவான ஆவணங்களுக்கான வில்லங்க சான்றிதழ் மட்டுமே ஆன்லைன் முறையில் கிடைக்கும். அதற்க்கு முன்னர் உள்ள ஆவணங்கள் எதுவும் ஆன்லைன் முறையில் கிடைக்காது. அதனால் 1950 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதிவான ஆவணங்களுக்கான வில்லங்க சான்றிதழ்களை ஆன்லைன் முறையில் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தற்போது பதிவுத்துறையில் அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி 2.22 கோடி பக்க ஆவணங்களை ஸ்கேன் செய்து அனைத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற உரிய வேண்டும். அதற்கு உரிய செலவு விபரங்களை பதிவுத்துறை வரைவு திட்டத்தில் ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் ஆவணங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறைக்கு மாற்ற ரூ.24.56 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்த அரசாணை வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.